முத்தான வசனங்கள்
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் குழந்தைகள் தினச் சிறப்பு திரைப் படமாக காண்பிக்கப் பட்ட படத்தில் வந்த வசனம் ஒன்று என்னைக் கவர்ந்தது.
பணக்கார நாயகி தன் தந்தையிடம் சொல்லுகிறார்: "ஒரு ரிக்சாக் காரன் மனைவி ஆகிறதில் நான் ரொம்ப பெறுமைப் படுறேன்"
ஆஹா! எவ்வளவு எதார்த்தமான வசனம்!!!
ம்ஹ்ம்... எப்பொழுது நம் ஊர்ப் பெண்கள் "ஒரு கம்ப்யூட்டர் காரன் மனைவி ஆகிறதில் நான் ரொம்ப பெறுமைப் படுறேன்" என்று சொல்லப் போகிறார்களோ???
தமிழ் சினிமாவில் இது போன்று நிறைய வசனங்களைக் கேட்கலாம். அவற்றில் என்னைக் கவர்ந்த சில...
காதலர் தினம் - நாயகன் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில்...
நாயகன் : "ஐ லவ் யூ ரோசா"
நாயகி : "ஐ லவ் யூ ராசா"
உலகம் சுற்றும் வாலிபன் - விஞ்ஞானி முருகன் (MGR), பேரழிவை ஏற்படுத்தும் ஆயூதம் ஒன்றை, உலக மக்களின் நன்மைக்காக கண்டுபிடிக்கும் நேரம் சொல்லுகின்ற...
"சக்ஸஸ்... சக்ஸஸ்!!!"

0 Comments:
Post a Comment
<< Home