தட்ப வெட்ப சந்தேகம்
ஒவ்வொரு வருடமும் தட்பவெட்ப நிலை மாறும்போது தவறாமல் நான் கேட்கும் அங்கலாய்ப்பு...
சித்திரையில்...
"அப்பப்பா!!! என்ன வெயிலு! என்ன வெயிலு!! போன வருடம் இந்த மாதிரி இல்லை. வெக்கை குறைவாத்தான் இருந்தது"
மார்கழியில்...
"இப்ப பரவாயில்லை... போன வருடம் பார்க்க வேண்டுமே.. காலையில் பஜனைக்கு எழுந்திருக்கவே முடியாது.. அப்பிடி ஒரு குளிர்."
சரி, சரி.. வெப்பம் சென்ற வருடம், இந்த வருடத்தைவிட குறைவாக இருந்திருக்கிறது. அப்பொழுது, கெம்ப கவுடா காலத்தில் இந்த பெங்களூர்..., சுவிட்சர்லாந்து மாதிரி இருந்திருக்கும். ராஜ ராஜ சோழன் காலத்தில் தஞ்சாவூர்..., காஷ்மீர் மாதிரி இருந்திருக்கும்.

0 Comments:
Post a Comment
<< Home