நீங்கள் கதாநாயகரா... வில்லரா(!) ??
எனக்கு சிறு வதிலிருந்தே ஒரு சந்ததேகம்.... (ஹி! ஹி! ஹி... திரைப் பட சந்தேகம் தான்...)
கடை வீதியில் (market), வில்லன் வயதான ஏழை வியாபாரியிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருப்பார். வ.ஏ.வியாபாரி தன்னிடம் பணம் இல்லையென்றோ அல்லது தன் மகள் கல்வி/திருமணச் செலவுக்குப் பணம் தேவை என்றோ சொல்லுவார். வில்லன் தன் அக்மார்க் (AGMARK) சிரிப்பை சிரித்துவிட்டு வ.ஏ.வியாபாரியின் தள்ளு வண்டிக் கடையை அடித்து நொறுக்க எத்தனிக்கும் நேரம்... கதாநாயகன் திடீரென்று திரையில் தோன்றி வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை தடுத்து... ஒரு குத்து வசனம் (punch dialogue!!!) பேசிய பிறகு சண்டையை ஆரம்பிப்பார். சண்டையின் போக்கில், வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை வ.ஏ.வியாபாரியின் கடை மற்றும் பக்கத்து ஏழைகளின் கடைகளில் குறி தவறாமல் தள்ளிவிட்டு கடைச் சாமான்களை நொருக்கி விடுவார்.
என் சந்தேகமெல்லாம் இதில் யார் வில்லன்? யார் கதாநாயகன்??. வில்லனாவது ஒரு கடையோடு நிறுத்தி இருப்பார். ஆனால், நம் கதாநாயகன்???
இப்போதெல்லாம் கடை வீதியில், டீக்கடை, மண்பாண்டக் கடை, கலர்ப்பொடி கடை, பிளாஷ்டிக் (plastic) பாத்திரக் கடை மற்றும் காய்கறிக் கடை போன்றவற்றைப் பார்த்தால்.. நான் நினைப்பது எல்லாம்....
"கடவுளே! கதாநாயகன் இந்தக் தெருவுக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்..."

0 Comments:
Post a Comment
<< Home