10. நீ 7 மணிக்கு பீச்சுக்கு போ. அங்க பீட்டர் டையமண்டோட இருப்பான். இந்த கமர்கட்டை அவன்ட குடுத்திட்டு டையமண்டை வாங்கிக்கோ. ஹோட்டல் மெரினா போய் சரக்கை ரீட்டாகிட்ட சேத்துரு. ஜாக்கிரதை... போலீஷ்... பாதி இப்போ... வேலை முடிஞ்ச பிறகு மீதி...
9. ஐயோ முதலாளி! திடீர்னு கேட்டா, அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்? எனக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்னுங்க இருக்காங்க...
8. வேலைக் காரா நாய்ங்களா... என்னை பகைச்சிக்கிட்டா உங்களை எல்லாம் குடும்பத்தோட அழிச்சிருவேன்.
7. இவ்வளவு நாள் உன்னை பெத்து, வளத்து, ஆளாக்கினதுக்கு... இது தான் நீ செய்யிற கைம்மாறா??? .... என் வீட்டை விட்டு வெளியே போ... என்னை பொருத்த வரை நீ செத்துட்ட....
6. கடவுளே, எனக்குன்னு இதுவரை எதையும் நான் கேட்டதில்லை... இப்போ முதல் முறையா...
5. அம்மா, நான் BA first classல பாஸ் பண்ணிட்டேன்மா... -- உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு மகனே! இப்போ மட்டும் உங்க அப்பா உயிரோட இருந்தா எவ்வளவு சந்தோசப் படுவார் தெரியுமா?
4. சங்கர்... உங்க அம்மா எங்க கஷ்டடியில் இருக்காங்க... ஒழுங்கா அந்த டையமண்ட் எங்க இருக்குன்னு சொல்லிரு...
3. விஜய்.. இந்த இடத்த போலீஷ் சுத்தி வளைச்சாச்சு.. தப்பிக்க நினைக்காத...
2. இங்க நீ எவ்வளவு கத்துனாலும் யாருக்கும் கேக்காது... இப்போ உன்னை அந்த கடவுளே நினச்சாலும் காப்பாத்த முடியாது.
1. ராஜா.... உங்க வாரிசு இப்போ என் வயித்தில வளர்ந்த்துகிட்டு இருக்கு.